Thursday, April 29, 2021

நீதிமொழிகள்:1:3

 நீதிமொழிகள்:1:3

விவேகம், நீதி, நியாயம், நிதானம் என்பவைகளைப்பற்றிய உபதேசத்தை அடையலாம்.  


நீதிமொழிகளை வாசிப்பதன் மூலம் நாம் விவேகம், நீதி, நியாயம், நிதானம் இவைகளை நம் வாழ்வில் கடைபிடிப்பதற்கான அறிவை அடையலாம்.  நாம் பிறப்பிலே சுயநலவாதிகளாகவும், பாவத்தோடும் பிறந்திருக்கிறோம்.  கர்த்தர் நம்மை ஞானமுள்ளவர்களாக்கும் வரைக்கும் நாம் சுயநலத்திற்கும், பாவத்திற்கும், முரட்டாட்டத்திற்கும் அடிமைப்பட்டு தான் இருப்போம்.

விவேகம் என்பது ஒரு தடுமாற்றமான சூழ்நிலையில் சரியான முடிவை தேர்ந்தெடுப்பதைக் குறிக்கிறது. 

நீதிமொழிகள் புத்தகம் எது சரி எது தவறு என்று அறிவுறுத்துவதன் மூலம் நமக்கு நீதியைக் கற்பிக்கிறது. 

நியாயம் எப்பொழுதும் நீதியோடு தொடர்புபடுத்தப்படுகிறது.  ஞானமுடையவர்கள் ஒரு பிரச்சனையின் ஆழத்தைப் புரிந்து கொண்டு அதற்கான சரியான தீர்ப்பை வழங்குவார்கள். 

நிதானம்  என்பது எல்லோரும் விரும்பக்கூடிய வகையில் பொறுமையோடு எல்லாவற்றையும் கையாள்வது. 

நீதிமொழிகள் :1:2