Thursday, February 4, 2021

பந்தியை ஆயத்தப்படுத்தும் மேய்ப்பர்

 

சங்கீதம்:23:5

என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது. 

பந்தியை ஆயத்தப்படுத்தும் மேய்ப்பர்.

  • v  கர்த்தருடைய கோலும் தடியும் நம்மை எதிரிகளிடமிருந்து பாதுகாக்கும் என்று நான்காம் வசனத்தில் பார்த்தோம். மேலும்  அந்த எதிரிகளின் முன்பாகவே கர்த்தர் நம்மை நன்மைகளினால் நிரப்புவார்.
  • v  நம் தனிப்பட்ட வாழ்வில் கர்த்தர் நம் எதிரிகளுக்கு முன்பாக தொலைநோக்கு பார்வையோடு வைத்திருக்க்கிற ஆசீர்வாதங்களை குறிக்கிறது இவ்வசனம்.
  • v மேய்ப்பன் ஆடுகள் செல்லும் வழியில் இருக்கும் ஆபத்து நிறைந்த கற்கள் முட்கள் ஆகியற்றை அகற்றி அவற்றை நடத்தி கொண்டு போவான்.

எதிரிகள் நிறைந்த சூழல் தாவீதுக்கு பல நேரங்களில் உருவானது.  கைவிடப்பட்டதாக நினைத்த நேரத்தில் கடவுளின் ஆசீர்வாதங்களின் விருந்தை அனுபவித்து மகிழ்ந்தார். தைரியமாகவும், நம்பிக்கையுடனும், மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் முன்னோக்கி செல்கிறார் தாவீது. சவுல்ராஜா அவனை கொல்ல எத்தனித்த போது அவன் பாதுகாப்பாக வைக்கப்பட்டான்.  

ஆடுகளுக்காக  சிங்கத்தோடும் கரடியோடும் கூட போராடிய போதும் பாதுகாக்கப்பட்டான். கோலியாத்தின் கையினின்று பாதுகாக்கப்பட்டான்.

நாம் ஒரு பிரச்சனையில் இருந்து விடுபடும்போது எவ்வளவுசந்தோஷபடுவோம்.  மனதிற்குள் துள்ளி குதிப்போம். ஆனால் தாவீதிற்கு எதிராளிகள் மத்தியில் விருந்து சாப்பிடும் அனுபவமாக இருந்தது.

வசனம் 2 இல் அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் வழி நடத்தி சென்ற மேய்ப்பன் வசனம் 5 இல் ஒரு பந்தியையே ஆயத்தப்படுத்தி இருக்கிறார். அதிகமான அன்போடும், கவனத்தோடும் ஒரு விருந்தை ஏற்படுத்தி இருக்கிறார். நம் தலையை எண்ணெயினால் அபிஷேகம் பண்ணி இருக்கிறார். அமர்ந்த தண்ணீர்கள் வழி நடத்தி சென்ற மேய்ப்பன் இப்போது நிரம்பி வழியும் பாத்திரத்தின் நடுவில் நம்மை உட்க்கார செய்திருக்கிறார்.

இந்த வீழ்ச்சியடைந்த உலகத்தின் மத்தியில் நாம் வாழ வேண்டி இருந்தாலும் சமாதானத்தை தருகிற இயேசு கிறிஸ்துவினால் நம் இருதயம் சமாதானத்தோடு காக்கப்படுகிறது.

நிரம்பி வழியச் செய்யும் கர்த்தர்.

v ஆட்டிடையன் மேய்ச்சலின் இறுதியில் ஆடுகளை இளைப்பாற கிடைக்கு அழைத்து வந்து அவற்றிற்கு ஏதேனும் காயங்கள் இருந்தால் எண்ணெய்பூசி அதைகுணமாக்கும் முயற்சியில் ஈடுபடுவார். இது ஆடுகளை குணப்படுத்தி புத்துணர்ச்சி ஊட்டும்.

கர்த்தருடைய அதிகமான பாதுகாப்பு நமக்கு தரப்பட்டிருக்கிறது. பயம், கவலை, சந்தேகம்மற்றும் நிச்சயமற்ற சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் பாதுகாப்பு அருளுகிறார்.

எதிரிகளின் மத்தியிலும் கர்த்தர் தமது நன்மைகளினால் நம்மை நிரம்பி வழியச் செய்வார். மேலும் அவர் நம்மை முழுமையான நன்மைகளினால் நிரப்ப நாமும் அவர் மேல் நம் முழு விசுவாசத்தையும் வைக்க வேண்டும். இதுவே கர்த்தர் நம் மீது வைத்திருக்கும்எதிர்பார்ப்பு. அதை நிறைவேற்றுங்கள். 

சிந்திக்க

v  கர்த்தருடைய பிரசன்னத்தை உணர்ந்திருக்கிறீர்களா?

 

Wednesday, February 3, 2021

நம்மோடு கூட இருக்கும் கர்த்தர்

சங்கீதம்:23:4

நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும். 

தாவீது கோலியாத்தைக் கொன்ற நாள் முதல் சவுலுக்கு அஞ்சி வாழத் தொடங்கினார். அவர் தனது வாழ் நாளின் பெரும்பான்மையான நாட்களை தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள கெபிகளிலும் மலைகளிலும் மறைந்து வாழ்ந்தார். இஸ்ரவேலின் தேவன் அவரை எல்லா சூழலிலும் காத்து நடத்தினார். எனவே தான் அவர் இந்த வசனத்தை உள்ளத்தின் ஆழத்திலிருந்து உணர்ந்து சொல்லி இருக்க வேண்டும். 

தம் ப்ரசன்னத்தினால் பாதுகாக்கும் மேய்ப்பன்.

கர்த்தராகிய மேய்ப்பர் நம்மை சரியான பாதையில் வழி நடத்திச் செல்கிறார். அப்படியும் கூட நம்மை ஒருவித பயம் ஆட்கொள்ளுகிறது.

v  முந்தின வசனங்களில் அடிப்படை தேவைகளை சந்தித்து, அமைதியாய் நம்மை வழி நடத்தி, சரியான பாதையைக் காட்டும் மேய்ப்பர் என்று பார்த்தோம். அப்படிப்பட்ட மேய்ப்பன் இந்த வசனத்தில் நமக்கு பாதுகாப்பு வழங்குவதைக் காணலாம்.

v  தேவனாகிய கர்த்தர் சரியான பாதைகளில் நம்மை வழிநடத்திச் செல்லும் போது கூட நாம் பயப்படும்படியான காரியங்கள் நேரலாம்.

v  நோய்கள், விபத்துகள் போன்றவை நாம் மரண பள்ளத்தாக்கில் யாருடைய உதவியும் இல்லாமல் நாம் பயணிப்பதைப் போன்றும், கர்த்தர் நம்மை கைவிட்டு விட்டார் போன்றும் ஒரு தோற்றத்தைக் கொடுக்கும்.

v  இந்த சூழ்நிலைகள் கர்த்தர் நம்மை தவறான பாதையில் வழி நடத்திச் செல்கிறாரோ என்ற எண்ணத்தை , சந்தேகத்தை உருவாக்கலாம்.

இந்த விதமான இருண்ட நேரங்களில் தான் கர்த்தர் நம்மை எவ்வாறு பாதுகாத்து வழிநடத்திச் செல்கிறார் என்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். அதனால் தான் தாவீது நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்கு பயப்படேன் என்று தைரியமாக கூறுகிறார்.

ஸ்தேவான் தான் மரணப் பள்ளத்தாக்கின் மத்தியில் கடந்து சென்ற போதும் கூட தேவனைத் தொழுது கொண்டதாக வேதம் கூறுகிறது.

அப்போஸ்தலர்:7:59 

அப்பொழுது. கர்த்தராகிய இயேசுவே என் ஆவியை ஏற்றுக்கொள்ளுமென்று ஸ்தேவான் தொழுதுகொள்ளுகையில் அவனைக் கல்லெறிந்தார்கள்.

தேவன் அந்நேரம் அவரை தேற்றி, பலப்படுத்தி இருந்ததாலேயே அவரால் தேவனைத் தொழுது கொள்ள முடிந்தது.

 இன்னும் அநேக தேவ பிள்ளைகள் மரண பள்ளத்தாக்கை கடந்து போகும் போது சந்தோஷத்தோடும், சமாதானத்தோடும் காணப்பட்டார்கள்.  நோயின் தாக்கங்களினால் படுக்கைகளில் இருப்போர் கூட கர்த்தருக்குள் மகிழ்ச்சியாய் இருப்பதைக் காணலாம்.

கஷ்டம் , துயரம் , துன்பம் , நோய் , துக்கம் நம் வாழ்வில் இருந்தாலும் அதனைக் குறித்த பயத்தை நம் மேய்ப்பனாகிய கர்த்தர் நம்மை விட்டு எடுத்து போடுவார். எனவே எந்த சூழ்நிலையாயினும் கலங்க வேண்டாம். அந்த பள்ளத்தாக்கினூடே பாதுகாப்பாக நடத்திச் செல்லும் மேய்ப்பர் நமக்கு உண்டு. 

உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்

ஆடுகளை மேய்க்கும் மேய்ப்பனின் கோலின் நுனியில் வளைந்த ஒரு கைப்பிடி பகுதி காணப்படும். அது பொதுவாக ஒரு செம்மறி ஆட்டின் கழுத்தில் பொருத்த போதுமானது. ஒரு ஆடு குழியில் விழுந்தால் அதை வெளியே எடுக்க அந்த வளைவை பயன்படுத்துகிறார்கள். ஆடுகளை வேட்டையாட வரும் நாய்கள் மற்றும் ஓநாய்களை அந்த கோலைப் பயன்படுத்தி விரட்டுகிறார்கள்.

உன்னத தேவனின் பிள்ளைகளாகிய நாமும் எத்தனை முறை வாழ்க்கையில் சறுக்கி விழுந்திருக்கிறோம்? எத்தனை பிரச்சனைகளில் அகப்பட்டிருக்கிறோம்? அந்நேரங்களில் நம் மேய்ப்பர் நம்மை அந்த பிரச்சனைகளில் இருந்து விடுவித்ததை உணர்ந்திருக்கிறீர்களா? ஒவ்வொரு நாளும் கர்த்தர் நம்மை எந்த விதமான பிரச்சனைகளில் இருந்து பாதுகாத்து, விடுவிக்கிறார் என்பதை ஒரு குறிப்பேட்டில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். நாம் ஆச்சரியப்படும் விதங்களில் அவர் நம்மைப் பாதுகாத்து வருவதை நாம் அறிந்து கொள்ள முடியும். 

சிந்திக்க

v  கர்த்தர் காட்டும் சரியான பாதைகளில் செல்கிறீர்களா அல்லது உங்கள் சுயம் காட்டும் பாதையை தெரிந்தெடுத்து செல்கிறீர்களா?

 

Tuesday, February 2, 2021

நீதியின் பாதைகளில் நடத்தும் கர்த்தர்

 


சங்கீதம்:23:3

அவர்என் ஆத்துமாவைத் தேற்றி தம்முடைய நாமத்தினிமித்தம், என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார். 

தாவீதுஒரு இளம் ஆட்டிடையனாயிருந்த போதே கர்த்தரை தன் வாழ்க்கைக்குரிய மேய்ப்பனாகவும், தம்முடைய தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்கிறவராகவும்தன்இருதயத்திற்கு அமைதியை கொடுக்கிறவராகவும், ஆத்துமாவைத் தேற்றுபவராகவும் கண்டு கொண்டான். இதுவே அவர் கர்த்தரை நேசிக்கும் மனிதனாக மாற உதவியிருக்கும்.

தாவீதுகர்த்தருடைய இருதயத்திற்கு  ஏற்றவனாகமாறினார்.

I சாமுவேல்:13:14

இப்போதோஉம்முடைய ராஜ்யபாரம் நிலைநிற்காது; கர்த்தர்தம்முடைய இருதயத்திற்கு ஏற்ற ஒருமனுஷனைத் தமக்குத்தேடி, அவனைக்கர்த்தர் தம்முடையஜனங்கள்மேல் தலைவனாயிருக்கக் கட்டளையிட்டார்; கர்த்தர் உமக்கு விதித்த கட்டளையை நீர் கைக்கொள்ளவில்லையே என்று சொன்னான்.

அப்போஸ்தலர்:13:22

பின்புஅவர் அவனைத் தள்ளி, தாவீதை அவர்களுக்கு ராஜாவாக ஏற்படுத்தி, ஈசாயின்குமாரனாகிய தாவீதைஎன் இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டேன்; எனக்குச் சித்தமானவைகளையெல்லாம்அவன் செய்வான் என்று அவனைக்குறித்துச் சாட்சியுங் கொடுத்தார்.

ஒருமேய்ப்பன் தன் ஆடுகளுக்கு உணவும் தண்ணீரும் தந்து அவைகளை அமைதிப்படுத்தி இளைப்பாற செய்கிறான். அது போல நம் பரம பிதாவாகிய மேய்ப்பனும் நமக்கு மன அமைதியை தந்து நம் ஆத்துமாக்களுக்கு  ஒருபெலத்தை கொடுக்கிறார்.

தாவீதுஇந்த வார்த்தைகளை எழுதிய காலத்திலிருந்து சோர்வுற்று போய் இருந்த, இருக்கும் எண்ணற்ற ஆத்துமாக்களுக்கு தலைமுறை தலைமுறையாக ஊக்கப்படுத்தும் வசனமாக இந்த வசனம் காணப்படுகிறது.

ஆடுகள்சரியான பசுமை நிறைந்த மேய்ச்சல் நிலத்தை சென்றடைய மேய்ப்பனின்  வழிகாட்டுதல் தேவை. மேய்ப்பன் அவைகளை புல்லுள்ள இடங்களுக்கு அழைத்து செல்கிறார் . அது போலத்தான் நம் பரம மேய்ப்பரும் நம்மை நீதியின் பாதைகளில் வழி நடத்தி செல்ல ஆயத்தமாய் இருக்கிறார்.

நாம்செய்யும் முட்டாள்தனமான தவறுகளில் இருந்தும் கூட நம்மை மீட்டெடுக்கிறார். பின்னர் மெதுவாக நம்மை மீண்டும் சமாதான பாதையில் நடத்துகிறார். நமக்கான சரியான பாதையில் வழிநடத்துகிறார்.

இவ்வுலகில்ஆவிக்குரிய வாழ்வை வெற்றியாக வாழ்வதற்கு தேவனுடைய வழிநடத்துதல் தேவைவழிதெரியாமல் என்ன செய்ய வேண்டும் என்று நாம் தவிக்கும் போது தேவனின் துணையை நாடுங்கள்அவர்நம்மை அழகாக நீதியின் பாதையில் நடத்துவார்மாறாதஇன்ப புது வாழ்வை நமக்கு கொடுப்பார்.

இந்தஅற்புதமான வார்த்தைகள் நம் வாழ்வின் கடினமான நாட்களில் நாம் தியானிக்கும் போது நம்மேய்ப்பராகிய இயேசுவின் முகத்தைக் காணலாம். கிருபையும், சமாதானமும், சத்தியமும் நிறைந்த, நீதியும், அன்பும் கொண்ட பாதையில் நம்மை வழி நடத்துவார். 

மேய்ப்பர் நம்மைஏன் நீதியின் பாதைகளில் நடத்தவேண்டும்?

தம்முடையநாமத்தினிமித்தம் நம்மை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்அவருடையநாமத்திற்கு கனமும் மகிமையும் நாம் கொண்டு வர வேண்டும் என்பதற்காகவே நம்மை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.

நாம்கர்த்தரை நம் சொந்த ரட்சகராக ஏற்றுக் கொள்ளும் போது நம் ஆத்துமாவை புதிய வாழ்விற்கு நேராய் உயிர்ப்பிக்கிறார். அதன் பின் நாம் உலக கவலைகளால் சோர்ந்து, கவலை கண்ணீரோடு இருக்கும் போது நம் கண்ணீரை துடைத்து சோர்ந்து போய் இருக்கும் ஆத்துமாவைத் தேற்றி அதற்கு பெலன் கொடுக்கிறார்.

ஒருமேய்ப்பன் தன் ஆடுகளை செங்குத்தான பாதைகளில் அல்லது ஓநாய்களின் கூட்டத்திற்குள்ளோ வழி நடத்தி செல்ல மாட்டான் . அது போல நம் கர்த்தரும் நமக்கான சரியான பாதையில் வழி நடத்துகிறார். அவர் நம்மை தீமையில் இருந்து விடுவித்து சரியான பாதையில் நடத்திச் செல்வதன் மூலம் அவர் நாமம் மகிமைப்படுகிறது.

நாம்நம் ஆத்துமாவைப் பாதுகாத்து தேற்றிக் கொள்வதாக இருந்தால் நாம் பாதுகாப்பாக உணர மாட்டோம். நாம் நடக்க வேண்டிய பாதையை கர்த்தரின் உதவியுடன் திட்டமிடாவிட்டால் தோல்வியடைந்து விடுவோம். எனவே நம் ஆத்துமாவைத் தேற்றி பாதுகாக்கும் பொறுப்பை கர்த்தரிடம் விட்டுவிடுவோம். 

சிந்திக்க

v  நாம் கர்த்தருடைய இருதயத்திற்கு ஏற்றவர்களாக இருக்கிறோமா ?

v  எந்தெந்த பாவங்கள் மற்றும் காரியங்கள் நீங்கள் கர்த்தரின் பிள்ளைகளாக வாழ்வதற்கு தடையாய் இருக்கிறது?

v  சிந்தித்து ஒரு குறிப்பேட்டில் எழுதி வைத்து கொள்ளுங்கள். பின் கர்த்தரின் துணையோடு ஒவ்வொன்றாக விட்டு விட பாருங்கள்.