சங்கீதம்:23:1
கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்.
தேவைகளை சந்திக்கும் கர்த்தர்.
ஒருமேய்ப்பன் தன ஆடுகளுக்கு தாகமாக இருந்தால் ஏற்ற நேரத்தில் தண்ணீர் காட்டி, நோயில் இருந்தால் அதற்கு வைத்தியம் பார்த்து, வழி தவறி செல்லும் போது சரியான பாதையை காட்டி, அதனை வேட்டையாட வரும் மற்ற மிருகங்களிடமிருந்து பாதுகாக்கிறான்.
அதுபோல கர்த்தர் என் மேய்ப்பர் என்று நாம் தைரியமாக சொல்லலாம்.
1. அவர் நமக்கு தேவையான உணவு, உடை, உறைவிடம் தருவார். இதுஒரு மனிதனின் அடிப்படை தேவை.
2. நம்ஒவ்வொரு அடியிலும் நம்மை வழி நடத்துவார், ஆறுதலளிப்பர், பாதுகாப்பார், வழிகாட்டுவார். இன்பத்திலும் துன்பத்திலும் நம்மோடு இருப்பர்.
3. அவர் ஒரு மேய்ப்பனைப் போல நம்மை விட்டு விலகாமல் நம்மை கைவிடாமல் நம் தோழராக எப்போதும் நம்முடனே இருப்பார் என்று வாக்கு கொடுத்திருக்கிறார்.
தாழ்ச்சியடைந்துபோகாமல்காக்கும்கர்த்தர்.
கர்த்தரைமேய்ப்பராக ஏற்றுக் கொண்டவருக்கு எந்த விதத்திலும் தாழ்ச்சி அல்லது குறைவு ஏற்படுவதில்லை.
· இஸ்ரவேல்புத்திரர் 40 வருடம் வனாந்திர வழியாய் கர்த்தர் நடத்தி வந்த போது அவர்களுக்கு எந்த குறைவும் ஏற்படவில்லை.
o உபாகமம்:2:7 - உன் தேவனாகிய கர்த்தர் உன் கைக்கிரியைகளிளெல்லாம் உன்னை ஆசீர்வதித்து வருகிறார்; இந்தப் பெரிய வனாந்தரவழியாய் நீ நடந்துவருகிறதை அறிவார்; இந்த நாற்பதுவருஷமும் உன்தேவனாகிய கர்த்தர் உன்னோடேஇருந்தார்; உனக்கு ஒன்றும்குறைவுபடவில்லை என்று சொல் என்றார்.
o நமக்கு என்ன தேவை என்பதை கர்த்தர் நியமித்து வைத்திருக்கிறார். அந்தக் காரியங்களில், பொருட்களில்நமக்கு எந்த குறைவும் ஏற்படாது.
சிலநேரங்களில் நாம் விரும்புகிற வேலை படிப்பு தொழில் உடை வாழ்க்கை நமக்கு கிடைக்காமல் இருக்கலாம். ஏன் தெரியுமா?
நாம் விண்ணப்பம் பண்ணாமல் இருக்கிறதினால் நமக்கு சித்திக்கவில்லை என்று வேதம் கூறுகிறது.
யாக்கோபு:4:2,3
நீங்கள் இச்சித்தும் உங்களுக்குக் கிடைக்கவில்லை; நீங்கள் கொலைசெய்தும், பொறாமையுள்ளவர்களாயிருந்தும், அடையக்கூடாமற்போகிறீர்கள்; நீங்கள் சண்டையும் யுத்தமும் பண்ணியும், நீங்கள் விண்ணப்பம் பண்ணாமலிருக்கிறதினாலே, உங்களுக்குச் சித்திக்கிறதில்லை.
எனவேநம் குறைவுகளை நிறைவாக்கும் படி நாம் தேவனிடம் விண்ணப்பம் பண்ண வேண்டும்.
ஆனாலும்நம் சொந்த விருப்பங்களை நிறைவேற்றும்படி பண்ணுகிற விண்ணப்பங்கள் தேவனுக்கு தகாததாய் காணப்பட்டால் அதற்கு தேவன் பதில் தர மாட்டார். அச்சூழலிலும் நாம் நம் மேய்ப்பரை நம்ப வேண்டும். அவ்வாறுநம்பும் போது
· கர்த்தர்அதை சரியான நேரத்தில் நமக்கு தருவார்.
· அல்லதுஅது நமக்கு தேவை இல்லை என்பதை நமக்கு உணர்த்துவார்.
கர்த்தர்என் மேய்ப்பர் என்பதை உறுதியாக நம்புங்கள். நமக்கு எது சிறந்தது என்பதை அவர் அறிவார். இந்த நம்பிக்கை விசுவாசம் நம்மை திருப்தி அடைய செய்யும். நாம் கேட்டால் எல்லாம் கடவுள் தருவார் என்பதை விட, நமக்கு சிறந்ததை, சரியானநேரத்தில், தேவையான அளவு தருவார்என்ற விசுவாசத்தோடு கர்த்தராகிய மேய்ப்பனை நம்புவோம். ஒரு போதும் தாழ்ச்சியடைந்து போக மாட்டோம்.
சிந்திக்க
v கர்த்தர் உங்கள் எந்தெந்த தேவைகளை சந்தித்தார்?
v எந்த காரியங்களில் நீங்கள் தாழ்ச்சி அடையாமல் பாதுகாத்தார்?
சிந்தித்து பட்டியலிடுங்கள்.