Monday, March 29, 2021

நீதிமொழிகள் :1:2


நீதிமொழிகள் :1:2

இவைகளால் ஞானத்தையும் போதகத்தையும் அறிந்து, புத்திமதிகளை உணர்ந்து,

நீதிமொழிகள் மூலம் ஞானத்தையும்போதகத்தையும் ஒருவர் அறிந்து கொள்ளலாம்.  மேலும் புத்திமதிகளையும் உணர்ந்து கொள்ளலாம். 

ஞானம் என்பது வாழ்க்கையை நடத்துவதற்கான ஒரு தெளிவைக் குறிக்கிறது.  தார்மீக ஒழுக்கத்தையும் நீதிமொழிகள் எடுத்துக் கூறுகிறது. 

ஞானம் என்பது அறிவு மட்டுமல்லதெய்வீக பயத்துடன் கர்த்தர் விரும்பிய வாழ்க்கையை வாழும் தெளிவை ஞானம் குறிப்பிடுகிறது.  நல்லது எது கேட்டது  எது என்பதையும் பகுத்தறிவது ஞானமே.

ஞானத்தில்  சாலொமோன் தன் வாழ்வில் அதைப் பயன்படுத்த தவறினார்.  அவரது மகன் ரெகோபெயாமும் எல்லா புத்திமதிகளைப் பெற்றுக் கொண்டாலும், அதை ஞானத்தோடு பயன்படுத்த தவறினான்.  தன் தந்தையின் போதனைகளை நிராகரித்தார். 

நீதிமொழிகள் :1:1
 

No comments:

Post a Comment