Tuesday, October 6, 2020

நாள் 3 - துதித்துப் பாடி தேவனை தொழுது கொள்ளுவோம்

 சங்கீதம் :66:4
பூமியின்மீதெங்கும் உம்மைப் பணிந்துகொண்டு உம்மைத் துதித்துப் பாடுவார்கள்; அவர்கள் உம்முடைய நாமத்தைத் துதித்துப் பாடுவார்கள் என்று சொல்லுங்கள். 

மேசியாவாகிய கர்த்தர் மனிதனைப் படைத்து , தமது ஜனத்தை ரட்சித்து மீட்டுக்கொண்டிருக்கிறார். சபைக்கு தலையாய் இருக்கிற நம் ரட்சகர் வணக்கப்படத்தக்கவர்.  

அவர் மேல் விசுவாசம், நம்பிக்கை, அன்பு கொண்டவர்களாய் உள்ளான பரிசுத்தத்தோடு வணங்க வேண்டும். மேலும் நம் சொற்கள், செயல்கள்,கர்த்தருடைய கட்டளைகளை கைக்கொள்ளுதல் போன்றவற்றின் மூலம் பிறர் நாம் கர்த்தரை பரிசுத்தத்தோடு தொழுது கொள்வதை காண வேண்டும். 

இந்த பரிசுத்தமான தொழுதால் பூமியின் மீதெங்கும் உண்டாகும். பூமியெங்கும் ராஜாவாக கிறிஸ்து இருப்பார். 

சகரியா :4:9

அப்பொழுது கர்த்தர் பூமியின்மீதெங்கும் ராஜாவாயிருப்பார்; அந்நாளில் ஒரே கர்த்தர் இருப்பார் அவருடைய நாமமும் ஒன்றாயிருக்கும். 

சகரியா :4:16

  பின்பு எருசலேமுக்கு விரோதமாக வந்திருந்த எல்லா ஜாதிகளிலும் மீதியான யாவரும் சேனைகளின் கர்த்தராகிய ராஜாவைத் தொழுதுகொள்ளும்படிக்கும் கூடாரப்பண்டிகையை ஆசரிக்கும்படிக்கும் வருஷாவருஷம் வருவார்கள்.   

  • கர்த்தரை அறியாத மற்றும் அவருக்கு விரோதமாக இருந்த ஜாதிகளும் கூட சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை தொழுது கொள்ளும் காலம் அது. 
வெளிப்படுத்தல் :15:4

கர்த்தாவே யார் உமக்குப் பயப்படாமலும் உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருக்கலாம்? தேவரீர் ஒருவரே பரிசுத்தர் எல்லா ஜாதிகளும் வந்து உமக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்கள்; உம்முடைய நீதியான செயல்கள் வெளியரங்கமாயின என்றார்கள். 

அந்நாளில் 
  • பூமியின் மீதெங்கும் உள்ளவர்கள் கர்த்தருக்கு பயப்படுவார்கள். அவருடைய நாமத்தை மகிமைப்படுத்துவார்கள். கர்த்தர் பரிசுத்தர் நீதியின் தேவன் என்பது அனைவருக்கும் தெரியும்படியான காலமாய் இருக்கும். 
  • பூமியின் மீதெங்கும் கர்த்தரைப் பணிந்து கொள்ளும் ஜனங்கள் அவரைத் துதித்துப் பாடுவார்கள். 
    • மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவரின் பாட்டையும் பாடுவார்கள். அந்நாளில் தேவரீருடைய மகத்துவமும் ஆச்சரியமுமான கிரியைகளை பூமியில் உள்ள அனைத்து குடிகளும் கண்டு கொள்வார்கள். அவருடைய வழிகள் நீதியும் சத்தியமும் உள்ளவைகள் என்பதையும் உணர்ந்து கர்த்தரைத் துதித்துப் பாடுவார்கள். (வெளிப்படுத்தல் :15:3).
    • கர்த்தரால் அனைத்து ஜனங்களும் மீட்கப்பட்டிருப்பார்கள்.
  • பூமியின் மீதெங்கும் உள்ளவர்கள் கர்த்தருடைய நாமத்தைத் துதித்துப் பாடுவார்கள். 
    • நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும். (ஏசாயா:9:6)
கர்த்தரைப் பணிந்து தொழுது கொள்ளுவதில் துதித்தல் ஒரு முக்கியமான செயலாக இருக்கிறது. கர்த்தருடைய கரத்தில் இருந்து நன்மைகளைப் பெரும் போது மட்டுமல்ல எந்த சூழ்நிலை ஆயினும் கர்த்தரைத் துதித்தல் இன்பமும் ஏற்றதுமாய் இருக்கிறது. 

  • நாமும் கர்த்தரைப் பணிந்து கொள்ளுவோம். 
  • அவருடைய நாமத்தைச் சொல்லித் துதிப்போம். 
  • அவர் நம் வாழ்வில் 
    • அதிசயம் செய்வார் 
    • ஆலோசனைத் தருவார் 
    • வல்லமை உள்ள தேவனின் கரத்தின் கீழ் அடங்கி இருந்து நித்தியத்தைப் பெற்றுக் கொள்ளுவோம் 

No comments:

Post a Comment