யோவான்:4:24
தேவன் ஆவியாயிருக்கிறார் அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.
கர்த்தரை ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்ள வேண்டும் . கடவுளை தொழுதல் என்பது சுத்தமுள்ள இருதயத்தோடு இருக்க வேண்டும். மனுஷர் பார்க்க வேண்டும் என்பதற்காக வேதத்தை வாசிப்பது, ஜெபக்கூட்டங்களுக்கு செல்வது, ஆலயம் செல்வது போன்றவைகளை செய்தல் கூடாது. மாய்மாலமாய் தேவனை தொழுது கொள்ளுதல் கூடாது.
மனத்தாழ்மையான ஒரு இருதயத்தோடு தேவனை தொழுது கொள்ள வேண்டும். தேவனோடு ஒரு பரஸ்பர உறவை ஏற்படுத்திக்கொள்வதே அவரை உண்மையாய் தொழுது கொள்ளுதல் ஆகும். சுய நலம் கூடாது.
I சாமுவேல்:16:7
கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீரவளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார்.
தாழ்மையுடன் கர்த்தருக்கு பயந்து அவரைக் கூப்பிடுகிறவர்களுக்கு பதில் அளிப்பார் நம் தேவன்.
நாம் பரிசுத்தமும், தேவனுக்கு பிரியமுமான ஒரு வாழ்வை அனுதினமும் வாழ்வதே கர்த்தருக்கு நாம் செய்யும் புத்தியுள்ள ஆராதனை.
No comments:
Post a Comment