தானியேல்:2:20
பின்பு தானியேல் சொன்னது: தேவனுடைய நாமத்துக்கு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ஸ்தோத்திரமுண்டாவதாக; ஞானமும் வல்லமையும் அவருக்கே உரியது.
தானியேல் உன்னதத்தின் தேவனை ஸ்தோத்தரித்தான். நேபுகாத்நேச்சார் கண்ட சொப்பனத்தின் மறைபொருள் வெளிப்படுத்தப்பட்டதற்காக தேவனை ஸ்தோத்தரித்தான்.
ஞானமும், வல்லமையும் கர்த்தருடைய கரத்தில் இருந்து கிடைக்கிறது என்று தானியேல் தெரிந்து கொண்டிருந்தான். எனவே தான் கர்த்தருடைய இரக்கத்திற்காக பரலோகத்தின் தேவனை நோக்கி விண்ணப்பம் பண்ணினான். ராக்காலத்தில் தரிசனத்தில் மறைபொருள் வெளிப்படுத்தப்பட்டது. உடனே அவன் பரலோகத்தின் தேவனை ஸ்தோத்தரித்து புகழ்ந்தான்.
கர்த்தருடைய கரத்தில் இருந்து அனுதினமும் நன்மைகளைப் பெற்றுக்கொள்ளுகிற நாம் அவரை ஸ்தோத்தரிக்கிறோமா ? அல்லது நன்மைகளைப் பெற்றுக்கொண்டவுடன் கர்த்தரை மறந்து விடுகிறோமா? சிந்தியுங்கள்.
நீங்கள் கர்த்தரின் கரத்தில் இருந்து பெற்றுக்கொண்ட நன்மைகளைப் பட்டியலிடுங்கள். கர்த்தரை துதித்துக்கொண்டே இருப்பீர்கள்.
கர்த்தருடைய கரத்தில் இருந்து அனுதினமும் நன்மைகளைப் பெற்றுக்கொள்ளுகிற நாம் அவரை ஸ்தோத்தரிக்கிறோமா ? அல்லது நன்மைகளைப் பெற்றுக்கொண்டவுடன் கர்த்தரை மறந்து விடுகிறோமா? சிந்தியுங்கள்.
நீங்கள் கர்த்தரின் கரத்தில் இருந்து பெற்றுக்கொண்ட நன்மைகளைப் பட்டியலிடுங்கள். கர்த்தரை துதித்துக்கொண்டே இருப்பீர்கள்.
No comments:
Post a Comment